×

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 11: கெலமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சித்திரன், ஸ்ரீகண்டன், செல்வராஜ், சந்திரசேகரன், முருகேசன், சதீஸ்குமார், வீரபத்திரன் ஆகியோர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாதம் ₹250 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால், வறுமையில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் அனைவருக்கும் பணியை நிரந்தரமாக்கி, ஊதிய உயர்வு வழங்குமாறு தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினோம்.

அந்த மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க, கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கலெக்டரிடம் வழங்கிய தனது அறிக்கையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கும் பணியில் நாங்கள் யாரும்  இல்லை என்று தவறான தகவல் வழங்கியுள்ளார். எனவே, கள ஆய்வு செய்து விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் எங்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க அரசுக்கு பரிந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : reservoir tank operators ,payroll hike ,
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு