×

ஊத்தங்கரை மாணவி கடத்தல் அரூர் வாலிபர் மீது புகார்

ஊத்தங்கரை, ஜூன் 11: ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் மேட்டுதெருவை சேர்ந்தவர் பிரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர். அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை எம்ஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி காலை வெளியில் சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து பிரியாவின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் தெரிவித்தனர். அதில், தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தங்கள் மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Uthangarai ,student kidnapping ,
× RELATED ₹25 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 பேர் கைது