×

அஞ்செட்டி வனத்தில் ஆண் சடலம் மீட்பு

தேன்கனிக்கோட்டை, ஜூன் 11:  அஞ்செட்டி வனப்பகுதிக்குட்பட்ட நாட்றாம்பாளையம்-பிலிகுண்டுலு இடையே 2வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கதக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து அஞ்செட்டி வனத்துறையினர், அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், அஞ்செட்டி காவல் ஆய்வாளர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டு சடலத்தை வீசி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Anjit Forest ,
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்