×

காவேரிப்பட்டணம்-அகரம் ரோட்டில் சாக்கடை கால்வாய் அடைப்பால் சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்

காவேரிப்பட்டணம், ஜூன் 11: காவேரிப்பட்டணம்-அகரம் சாலையில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாயில் விடப்படுகிறது. அதேவேளையில், சிலர் குப்பை கழிவுகளையும் சாக்கடை கால்வாயில் கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் பெருக்கெடுப்பது வழக்கமாக உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்ள் கூறுகையில், நீண்ட நாட்களாகவே சாலையில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. இதனால், நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்துச் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : road ,Kaveripattinam-Amrimala ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...