×

வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்

தர்மபுரி, ஜூன் 11: பொம்மிடி சுற்றுவட்டார பகுதியில், திருட்டு சம்பவங்களைத் தடுக்க வணிக நிறுவனங்கள் சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. பொம்மிடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அடிக்கடி நிகழும் திருட்டு சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக, காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. எஸ்ஐ மணிமாறன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்குகளை இரவு நேரங்களில் ஒளிரவிட வேண்டும். தேவையான அளவு காவலாளிகளை நியமிக்க வேண்டும். எச்சரிக்கை மணி எழுப்பும் கருவிகளை பொருத்த வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த முகாமில் பொம்மிடி சுற்றுவட்டார பகுதி வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : companies ,
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!