×

மடதள்ளியில் காட்சி பொருளான சுகாதார வளாகம்

கடத்தூர், ஜூன் 11:  மடதள்ளியில் உரிய பராமரிப்பின்றி காட்சி பொருளான சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கடத்தூர் அடுத்த மடதள்ளி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 2010-11ம்  ஆண்டு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால், உரிய முறையில் பராமரிக்காததாலும், மின் மோட்டார் பழுது காரணமாகவும் கடந்த 6 ஆண்டுகளாக சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள், சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Health campus ,
× RELATED மருதங்காவெளி அய்யாநகர் பகுதியில்...