நாசரேத், ஜூன் 11: நாசரேத் அருகே நடந்துசென்றுகொண்டிருந்த மூதாட்டி, பைக் மோதியதில் படுகாயமடைந்தார். நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரம் என்.டி.என் தெருவைச் சேர்ந்த சண்முகசாமி மனைவி உத்திரகுமாரி (55). இவர் நேற்று முன்தினம் பிரகாசபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மூக்குப்பீறி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த அதிசயராஜ் மகன் ஆண்ட்ரூஸ் (23) என்பவர் ஓட்டிவந்த பைக், எதிர்பாராதவிதமாக உத்திரகுமாரி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த உத்திரகுமாரி அளித்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.