×

தூத்துக்குடி அரசு ஐடிஐயில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஜூன் 28ம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி, ஜூன் 11: தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விக்னேஷ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தூத்துக்குடி  அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி 2019-20ம் கல்வியாண்டிற்கான மாணவர்  சேர்க்கை வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேரடியாக இரண்டாமாண்டில் சேர  பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் இவர்கள் இரண்டு வருடம் படித்தால் போதுமானது.  இதற்கு மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். முதலாமாண்டு பட்டய  படிப்பில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இவர்கள் மூன்று  ஆண்டு பட்டய படிப்பை படிக்கவேண்டும். தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்  கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் (இசிஇ) மட்டுமே  காலியிடம் உள்ளது. பகுதி நேர மாணவர்களுக்கு அமைப்பியல், இயந்திரவியல்,  மின்னியல் துறைகளில் படிக்கலாம். இவர்கள் 4 ஆண்டு பயில வேண்டும். நேரடி  இரண்டாமாண்டு பயில வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதலாமாண்டு பயில  வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதேபோன்று முதலாமாண்டு பகுதிநேர  பிரிவில் சேருவதற்கும் வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Thoothukudi Government ,ITI ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...