திருவேங்கடம், ஜூன் 11: குருவிகுளம் அருகே செவல்குளம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக குருவிகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பியோடினார். அவரை போலீசார் விரட்டி சென்று மடக்கினர். விசாரணையில் அவர், செவல்குளம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி(46) என்பதும், அப்பகுதியில் மது விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.