×

ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்த மூதாட்டி சாவு

நெல்லை, ஜூன் 11:  வி.கே.புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ராமு (70). இவரது மகன் சென்னையிலும், மகள் அடையகருங்குளத்திலும் வசித்து வருகின்றனர். மனதளவில் பாதிப்புக்கு உள்ளானதாக் கூறப்படும் ராமு,  வைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் கற்கள் உள்ள பகுதியில் இருந்து நேற்று அதிகாலை திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற  வைகுண்டம் இன்ஸ்பெக்டர் ஜோசப்  ஜட்சன், எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,river ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை