×

ஆரணி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

ஆரணி, ஜூன் 11: ஆரணி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் அருகே உள்ள திருமலை கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், தொழிலாளி. இவரது மனைவி கீர்த்தனா(19). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது சொந்த ஊரான திருமலையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கீர்த்தி(1) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக ராஜசேகர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல், நேற்று முன்தினம் கீர்த்தனா, ராஜசேகரை வேலைக்கு போக சொல்லி கூறினாராம்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனவேதனையடைந்த கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வடமாதிமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

தகவலறிந்த களம்பூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கீர்த்தனாவிற்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகள் ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடத்த உள்ளார்.

Tags : Teenager ,suicide ,Arani ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...