×

ஆந்திராவில் தன்னார்வலர்கள் மூலம் வழங்க ஏற்பாடு ரேஷன்பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி வரும்

திருமலை, ஜூன் 11: ஆந்திராவில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் பயனாளிகள் வீட்டிற்கே சென்று தன்னார்வலர்கள் மூலமாக வழங்க ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த முதல் கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பேரணிநானே நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் முதல் கிராமத்தில் உள்ள அதிகாரிகள் வரை யாரும் ஊழல் செய்யக்கூடாது என்பதே முதல்வரின் முக்கிய நோக்கம். ஊழல் இல்லாத மாநிலம் அமைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
எனவே இரண்டரை ஆண்டுகள் பதவி இருக்கும் அமைச்சர்கள் என்ன செய்தாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். அமைச்சர்கள் தவறு செய்தாலும், ஊழல் முறைகேடு புகார்கள் வந்தாலும் அவர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதோடு, பதவியில் இருந்தும் விளக்கப்படும் என முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநில அரசு என்றால் விவசாய அரசு என்று அனைவரும் என்னும் விதமாக விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 50 வீடுகளுக்கு ஒரு கிராம தன்னார்வலர்கள் என நகராட்சி பள்ளிகளில் வார்டு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நியமனம் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15, அக்டோபர் 15ம் தேதி முதல் கிராம தன்னார்வலர்கள் தங்கள் பணிகளை தொடங்க உள்ளனர். அரசு கொண்டு வரக்கூடிய திட்டங்கள் அனைத்தையும் வார்டு தன்னார்வலர்கள், கிராம தன்னார்வலர்கள் மூலமாக பயனாளிகளின் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும். அம்மா வழி திட்டத்தின் கீழ் எந்த ஒரு குழந்தையும் கூலி வேலைக்கு செல்லக்கூடாது. அனைத்து பிள்ளைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஜனவரி 26ம் தேதி முதல் பள்ளி செல்லக்கூடிய குழந்தையின் தாயாருக்கு ₹15 ஆயிரம் வழங்கப்படும். அது அரசு பள்ளியில் படிக்க வைத்தாலும், தனியார் பள்ளியில் படிக்க வைத்தாலும் அந்த குழந்தையின் தாயாருக்கு ₹15 ஆயிரம் நிதி வழங்கப்படும். இது பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இதனால் 4 லட்சத்து 24 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். இதேபோல் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் தற்போது வழங்கக்கூடிய அரிசி தரமற்ற நிலையில் உள்ளதால் அதனை வாங்க கூடிய பொதுமக்கள் ஒரு கிலோ ₹6 முதல் ₹10க்கு வெளியில் விற்ற கூடிய நிலை ஏற்படுகிறது. அதனை கள்ளச்சந்தையில் பெறுபவர்கள் பாலிஷ் செய்து மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரக்கூடிய நிலை உள்ளது. எனவே இதுபோன்ற நிலை அல்லாமல் அரசு அதிகாரிகள் நடுத்தர மக்கள் சாப்பிடக்கூடிய வகையில் இருக்கக் கூடிய அரிசியை அரசே கொள்முதல் செய்து அதனை 5 முதல் 15 கிலோ பாக்கெட்களாக கிராம தன்னார்வலர்கள் மூலமாக வீட்டிற்கே கொண்டு சென்று பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் 5 முதல் 6 நிதி அவசர பொருட்களையும் பயனாளிகளுக்கு வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை ரேஷன் பொருட்களை பெற வேண்டும் என்றால் குடும்ப உறுப்பினர்கள் யாராவது சென்று கைகளை வைத்து பதிவு செய்து பொருட்களை பெற வேண்டும். இனி அவ்வாறு இல்லாமல் கிராம தன்னார்வலர்கள் மூலமாக நேரடியாக பயனாளிகள் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கப்படும். மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி உள்ளது. இந்த பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்து புகைப்படம் எடுக்கவும், அந்த பள்ளிகளில் குடிநீர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்துவதற்காக கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

104 மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை தற்போது எந்த நிலையில் உள்ளது. தரமற்ற வாகனங்களை ஏலம் போட்டு விற்பனை செய்து புதிய வாகனங்களை கொள்முதல் செய்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் புதிய ஆம்புலன்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக போன் செய்த 20 நிமிடத்தில் பயனாளிகளுக்கு சேவை கிடைக்க வேண்டும் என முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Volunteers ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி