நாசரேத், ஜூன் 7: நாசரேத் அருகே பிரகாசபுரம் எஸ்.டி.ஏ சபை சார்பில் ஞானராஜ் நகர் மெயின் ரோட்டில் ஆவிக்குரிய நற்செய்தி பெருவிழா 8 நாட்கள் நடந்தது. மதுரை போதகர் ஜாண் மோசஸ் சிறப்பு செய்தி வழங்கினார். இதையொட்டி சிறப்பு பாடல்கள் பாடப்பட்டன. ஏற்பாடுகளை பிரகாசபுரம் எஸ்.டி.ஏ சபை பாஸ்டர் அருளானந்தம் டேனியல், சபை பொருளாளர் தனசிங் மற்றும் எஸ்.டி.ஏ சபை மக்கள் செய்திருந்தனர்.