×

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் இளம்பெண்ணை வெட்டிய கணவர் கைது

தூத்துக்குடி, ஜூன் 7: தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு பகுதியை  சேர்ந்தவர் சேசு மிக்கேல் மகன் ராஜ்குமார் (28). இவருக்கும் புதுக்குடியை  சேர்ந்த வனிதா (24) என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 8 மாத பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக  தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், விவகரத்து கோரி ராஜ்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து வனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முன் தினம் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று  பேச்சுவார்த்தை நடத்தியுள்னர். அப்போது அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், அவரது தந்தை சேசுமிக்கேல் ஆகியோர் வனிதாவை சராமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளதாக தெரிகிறது. இதில் வனிதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த தகராறில் வனிதாவின் குடும்பத்தினர் தாக்கியதில் சேசுமிக்கேல், அவரது மனைவி அன்னத்தாய் ஆகிய 2பேரும் காயம் அடைந்துள்ளனர். வனிதா அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வனிதாவின் கணவர் குடும்பத்தினர் மற்றும் கணவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

Tags : family dispute ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...