×

அம்பை, கல்லிடைக்குறிச்சியில் மனோஜ்பாண்டியன் நன்றி தெரிவிப்பு

அம்பை, ஜூன் 7: அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பை, கல்லிடைக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் திறந்தவெளி ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக மனோஜ்பாண்டியன் போட்டியிட்டார். அவர் அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லிடைக்குறிச்சி, ஊர்க்காடு, கவுதமபுரி, பிரம்மதேசம், வாகைக்குளம், மன்னார்கோயில், ஆலடியூர், மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, வைராவிகுளம் பாப்பான்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திறந்தவெளி ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் அம்பை பூக்கடை சந்திப்பில் பேசுகையில், எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ சக்திவேல்முருகன், மாவட்ட துணைசெயலாளர் பார்வதிபாக்கியம், அம்பை நகர செயலாளர் அறிவழகன், துணை செயளர் மதன், ஆவின் பால் துணை சேர்மன் கணபதி, மாவட்ட பிரதிநிதி சுடலை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Manojpandian ,
× RELATED கிடாரக்குளத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு