×

பத்மினி கார்டனில் சம்மர் எக்ஸ்போ 9ம் தேதி நிறைவு

திருப்பூர், ஜூன் 7: கோடை விடுமுறையையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாக குழந்தைகள் உலகம் மற்றும் சம்மர் எக்ஸ்போ என்ற பொருட்காட்சி திருப்பூர் காங்கயம் ரோடு பத்மினி கார்டனில் நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியின் நுழைவாயிலில் ராட்சத கிங்காங் பொம்மை அசையும் வகையிலும், உள்ளே நுழைந்த உடன் சிங்கம், புலி, கரடி, யானை மற்றும் டாம் அண்டு ஜெரி, மோட்டு-பட்லு, அவதார், ஸ்பைடர் மேன், டிராகன் உள்ளிட்ட பொம்மைகள் சத்தமிடும் வகையிலும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சிக்கு வரும் அனைவரும் இந்த இடங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் ஜெயின்ட் வீல், பிரேக் டான்ஸ், டைட்டானிக் உள்ளிட்ட ராட்டு வகைகளும், பனிமலை, வாட்டர் போட், 3 டி ஷோ போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதேபோல் டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, காளான், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அறுசுவை உணவு வகைகளும் அங்கு உள்ளன. இந்த பொருட்காட்சி வரும் 9ம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பொருட்காட்சி நடக்கிறது.

Tags : Summer Expo 9 ,Padmini Garden ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...