திருப்பூர், ஜூன் 7:திருப்பூர் தொங்குட்டிபாளையத்தை சேர்ந்த அசோக் குமார் (27). இவர் திருப்பூர் நல்லூரில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து ராக்கியாபாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அசோக் குமார் படுகாயமடைந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக் குமார் உயிரிழந்துள்ளார். இது குறித்து ஊரக போலீசார் விசாரித்து வருகின்றனர்.