×

டிஎஸ்பி வீட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை

ஈத்தாெமாழி, ஜூன் 7: ஈத்தாமொழி அருகே உள்ள மேலதர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (60). ஓய்வுபெற்ற டிஎஸ்பி. தற்போது குடும்பத்துடன் விழுப்புரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மேலதர்மபுரத்தில் உள்ளது. இந்த வீட்டை அவரது சகோதரர் கணேசன் கவனித்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை சுயம்பு இங்கு வந்து வீட்டை பார்த்து விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் அன்று மாலை கணேசன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. ஆனால் பணம், நகை என எந்த விலை உயர்ந்த பொருளும் கொள்ளை போகவில்லை.
நேற்றுமுன்தினம் சுயம்பு வந்து சென்றது குறித்து அறிந்த திருடர்கள் அவர் ஏதாவது பணம், நகை வைத்துவிட்டு சென்றிருப்பார் என நினைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் எந்த பொருளும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இது குறித்து கணேசன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : DSB ,house ,
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?