×

குடிபோதையில் மயங்கியவர் சாவு

ஈரோடு, ஜூன் 7:சத்தியமங்கலம்  அருகே புளியங்கோம்பையை சேர்ந்தவர் முத்தான் (55). கூலி தொழிலாளி. இவருக்கு  குடிப்பழக்கம் இருந்தது. இதனால், சரியாக சாப்பிடாமல் உடல்நிலை  பாதிக்கப்பட்டது. இந் நிலையில், கடந்த ஏப்ரல் 14ம் தேதி சத்தியமங்கலத்தில்  இருந்து அத்தாணி செல்லும் ரோட்டில் குடிபோதையில் முத்தான் மயங்கி  விழுந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று  முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். சத்தியமங்கலம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : death ,
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை