×

பவானி அரசு மருத்துவமனையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்

பவானி, ஜூன் 7:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலூகா மாகம்யூ., நகர செயலாளர் ஜெகநாதன், தாலூகா கமிட்டி உறுப்பினர்கள் ரவீந்திரன், மாணிக்கம் ஆகியோர், பவானி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கோபாலகிருஷ்ணனிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது :  காலை நேரங்களில் வெளிநோயாளிகள் பிரிவில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது  கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். நோயாளிகள் அமருவதற்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும். வெளிநோயாளிகள் பிரிவிலேயே ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த பரிசோதனை, மருந்து மாத்திரை, ஊசி போடுவது போன்ற பிரிவுகள் உள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால், நோயாளிகள் மட்டுமின்றி மருத்துவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஒரு சில பிரிவுகள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஒவ்வொரு பிரிவுகளுக்கும் பெயர் பலகை வைக்க வேண்டும். இருதய நோயாளிகளை நீண்ட நேரம் காக்க வைக்காமல் உடனடியாக கவனித்து அனுப்ப வேண்டும். நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். சுகாதாரமான குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.  இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட மருத்துவர் கோபாலகிருஷ்ணன் குறைபாடுகளை களைந்திட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags : Banavi Government Hospital ,
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...