×

கஸ்தூரிபா மாதர் சங்க வைரவிழா

நாகர்கோவில், ஜூன் 7: நாகர்கோவில் ராமவர்மபுரம் கஸ்துரிபா மாதர்நல அலுவலக சங்க செயலாளர் அனிதா நடராஜன் விடுத்துள்ள அறிக்கை: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1944ல் தோற்றுவிக்கப்பட்ட கஸ்தூரிபா மாதர் சங்கம் இந்த ஆண்டு தன்னுடைய வைரவிழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதனையொட்டி வைரவிழா சிறப்பு மலர் வெளி
யிடுவதென விழா குழுவினர் தீர்மானித்துள்ளனர். பல ஆண்டுகள் இச்சங்கத்தில் இணைந்து தொண்டாற்றிய தங்களுடைய முன்னோர்களின் நினைவுகளை இம்மலர் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் வருகிற ஜூலை மாத கடைசி வாரத்தில் 3 நாள் விழாவாக கொண்டாடுவது, மாணவ, மாணவிகளுக்கு கலைதிறன் போட்டிகள், சங்க உறுப்பினர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் நிறைவு விழா ஆகியவற்றை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kasturba Mather ,Sangam Diwali ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...