×

கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூன் 7: கடலூரில் அனைத்து குடியிருப்போர் சங்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் மருதவாணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புருஷோத்தமன், மாதவன், வெங்கடேசன், சுகுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், விவசாயம்,
சுற்றுச்சூழல் மற்றும்
குடிநீர் பிரச்னையை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கடலூர், டெல்டா மாவட்டங்
களில் கைவிட வேண்டும், நிதி ஒதுக்கியும் கிடப்பில் ேபாடப்பட்ட சென்னை-புதுவை-கடலூர் ரயில்வே திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், கடலூர் புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே மாற்று பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், பழுதடைந்த பைப்லைன், மோட்டார்களை சரிசெய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது