×

பட்டப்பகலிலும் எரியும் தெருமின் விளக்குகள்

திட்டக்குடி, ஜூன் 7: திட்டக்குடி அருகே பெருமுளை ரோட்டில் அனைத்து தெரு மின்
விளக்குகளும் தொடர்ந்து 3 தினங்களாக அணைக்கப்படாமல் தொடர்ந்து எரிந்து வருகின்றது.
திட்டக்குடியில் இருந்து செல்லும் பெருமுளை ரோட்டில் அண்ணாநகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் அரசு கலைக் கல்லூரி, நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம், அதற்குரிய குடோன் ஆகியவைகளும் இப்பகுதியில் இயங்குகின்றன. 10 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வழிபடும் பெருமுளை முத்தையா சுவாமி கோயிலுக்கு இவ்வழியாகத்தான் செல்ல வேண்டும். தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று திரும்புகின்றன. ஆனால் ஏதோ காரணங்களால் இந்த சாலையில் உள்ள 5 தெரு மின் விளக்குகளும் கடந்த 3 தினங்களாக இரவு பகல் பாராமல் தொடர்ந்து எரிந்து வருகிறது. மின் பிரச்னை நிலவும் கோடைகாலத்தில் அதிகாரிகள் மின் சக்தியை மிச்சப்படுத்துவதில் அக்கறை காட்டாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : street ,barracks ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்