புதுச்சேரி, ஜூன் 7: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவல் நிலைய வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதன்படி, புதுவை மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. வடக்கு எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் மரக்கன்றுகளை நட்டு, மரம் நடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் காவலர்கள், குடியிருப்புவாசிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.