×

கவுதம சிகாமணி வெற்றி வீரகனூரில் நன்றி அறிவிப்பு கூட்டம்

கெங்கவல்லி, ஜூன் 7: வீரகனூரில், கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதற்காக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கெங்கவல்லி தாலுகா வீரகனூர் பேரூராட்சியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, கள்ளக்குறிச்சி எம்பி கவுதமசிகாமணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வீரகனூர் நகர செயலாளர் அழகுவேல் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சின்னத்துரை, குணசேகரன், தலைவாசல் திமுக ஒன்றிய செயலாளர் மணி (எ)பழனிச்சாமி, முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, முன்னாள் ஒன்றிய செயலாளர் லட்சுமணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் பேசினார். இதில், 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கௌதம சிகாமணி எம்பியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முருகேசன் நன்றி கூறினார்..

Tags : Gautama Sikamani ,meeting ,Veeraganur ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...