திருச்சி, ஜூன் 7: இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றதையொட்டி நேற்று திருச்சியில், மாவட்ட பாஜ வக்கீல் அணி சார்பில் தலைவர் சுதாகர், செயலாளர் கதிரேசன், மாநில செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பலூன்களை பறக்கவிட்டும் கொண்டாடினர். அப்போது மகிழ்ச்சியில் தொண்டர் ஒருவர் வெடி வெடித்தார். எதிர்பாராதவிதமாக அந்த வெடி வெடித்து சிதறியதில் வெடிவைத்த தொண்டரின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் மாவட்ட தலைவர் தங்க ராஜய்யன், மாவட்ட இளைஞரணி தலைவர் கவுதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.