×

நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் ஓட்டல், மளிகை கடைகளில் சோதனை

நாமகிரிப்பேட்டை, ஜூன் 7: நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் உள்ள 60க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள், பயன்பாட்டுக்கு வைத்திருந்த கேரிபேக்குகளை பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு ₹3 ஆயிரம் அபராதம் விதித்தனர். நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தூர் மெயின்ரோடு, கடைவீதி, பஸ் நிலையம், வாரச்சந்தை பகுதியில் உள்ள ஓட்டல்கள், மளிகை மற்றும் பேக்கரி கடைகள் என 60க்கும் மேற்பட்ட கடைகளில், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், துப்புரவு ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர் பாலு ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, கடைகளில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த 18 கிலோ கேரிபேக்குகளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், தடையை மீறி பிளாஸ்டிக் கேரிபேக்குகளை வைத்திருந்த கடையின் உரிமையாளர்களுக்கு ₹3 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதுடன், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்தார்.

Tags : Grocery Stores ,Panorama Hotel ,
× RELATED குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்