×

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஒரு மாதமாக இயங்காத பயோமெட்ரிக் இயந்திரம்

குமாரபாளையம், ஜூன் 7: குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், அலுவலர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரம் செயலிழந்துள்ளதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வராமலேயே, வந்ததாக வருகை பதிவேட்டில் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு இயந்திரம், ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், நகராட்சி அலுவலர்கள், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இது குறித்து, நகராட்சி ஆணையாளர் ஜகாங்கீர் பாஷாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, அனைத்து பயோமெட்ரிக் கருவிகளும் நல்ல முறையில் இயங்குவதாக தெரிவித்தார். அதன் பின்னர் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றும் 4 மண்டலங்களில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகள் மட்டும் இயங்கி வருகிறது. ஆனால், நகராட்சி அலுவலகத்தில் உள்ள பயோ மெட்ரிக் கருவி இன்னும் இயங்கவில்லை. இதனால், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என குற்றம் சாட்டியுள்ள நகராட்சி அலுவலர்கள் சிலர், உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : office ,Kumarapalayam ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...