×

மணமகள் மாயம்: திருமணம் நிறுத்தம்

முசிறி, ஜூன் 7: முசிறியில் நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகள் மாயமானதால் திருமணம் நிறுத்தப்பட்டது.
முசிறி அடுத்த பைத்தம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், விவசாயி. இவர் தனது மகள் இந்துமதிக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார். இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் நேற்று முசிறியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக 5ம் தேதி இரவு மணமகள் இந்துமதியை உறவினர்கள் அழைத்து கொண்டு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். விடிந்தவுடன் நேற்று (6ம் தேதி) திருமணம் என்ற நிலையில் மணமகள் இந்துமதி அதிகாலை 3 மணிக்கு மாயமானார். பல இடங்களில் தேடியும் இந்துமதி கிடைக்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது.
இதையடுத்து முசிறி போலீசில் பாலகிருஷ்ணன் தனது மகளை காணவில்லை என்று புகார் செய்திருந்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து இந்துமதியை தேடி வருகின்றனர். திருமண நாளன்று மணமகள் காணாமல் போனதால் திருமணம் நின்று போன சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Bride ,
× RELATED மணப்பெண் மாயம்