×

திருச்செங்கோடு அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

திருச்செங்கோடு, ஜூன் 7: திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேல் மற்றும் வருவாய்த்துறையினர், குமரமங்கலத்தை அடுத்த போக்கம்பாளையத்தில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த லாரிகளில் உரிய ஆவணம் இல்லாமல் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த தாசில்தார் கதிர்வேல், திருச்செங்கோடு புறநகர் போலீசில் ஒப்படைத்தார். அதன் பேரில், விசாரணை நடத்திய போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர்களான சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த மூர்த்தி(25), சேலத்தை சேர்ந்த கதிர்(53) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமனறத்தி–்ல் ஆஜர்படுத்தி, நீதிபதி தனம் உத்தரவின் பேரில், இருவரையும் திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைத்தனர்.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்