×

சேந்தமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு

சேந்தமங்கலம், ஜூன் 7: கொல்லிமலை அடிவாரம் நடுக்கோம்பை கிராமத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்த 6 அடி மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர், காப்பு காட்டில் விடுவித்தனர். சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலை அடிவாரம் நடுக்கோம்பை அரங்கத்தப்பன் குன்று பகுதியை சேர்ந்த விவசாயி ராஜூ(52). இவரது விவசாய தோட்டத்தில், நேற்று மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. வயலில் தண்ணீர் எடுத்துவிட சென்ற ராஜூ, மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்து, வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வனவர் தமிழ்வேந்தன், வனக்காப்பாளர்கள் விஜயபாரதி, சுகுமாரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், சம்பவ இடத்துக்கு வந்து 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து, கொல்லிமலை காப்புக்காட்டில் விடுவித்தனர்.

Tags : garden ,Senthamangalam ,
× RELATED உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!!