×

தொட்டியம் அருகே பாலபுரத்தில் வடிகால் பாலத்தில் மெகா ஓட்டை

தொட்டியம், ஜூன் 7: தொட்டியம் அருகே சீத்தப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலபுரம் கிராமத்தில் பாலம் சேதமடைந்து பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.
 தொட்டியம் அருகே சீத்தப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலபுரம் கிராமத்தில் காலனி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதற்கு கழிவுநீர் வடிகால் மீது சிறு பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த பாலம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடைந்து பெரிய ஓட்டை விழுந்து பழுதடைந்துள்ளது. இரவு நேரத்தில் யாரேனும் வரும்போது இதில் தவறி விழுந்து காயமடைகின்றனர். கடந்த ஓராண்டாக சேதமடைந்த நிலையில் உள்ள இந்த பாலத்தை புதிதாக கட்டி தரவேண்டும் அல்லது உடைந்த பகுதியை சரி செய்து தரவேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே யாரேனும் இந்த பாலத்தின் ஓட்டையில் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன்னதாக தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பாலத்தை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : drainage bridge ,Thottai ,Palampur ,
× RELATED கொள்ளிடம் அருகே மேல வடிகால் பாலம் மதகு உடைப்பால் சாலை உள்வாங்கியது