×

வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து ராசிபுரத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம்

ராசிபுரம்,  ஜூன் 7: ராசிபுரத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து, நேற்று ராசிபுரம் பார்கவுன்சில் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ராசிபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வராஜ்(48). கடந்த வாரம் 30ம் தேதி  இரவு, இவரது அலுவலகத்துக்கு காரில் வந்து 6 பேர் கும்பல், இவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி, காக்காவேரி, பச்சபாலிகாட்டை சேர்ந்த ஏசி மெக்கானிக் விவேக்(29), மரப்பரை ரிக்வண்டி மேலாளர் ஜெயக்குமார்(33), மருந்துக்கடை உரிமையாளர் ராஜா(36), குப்புச்சிபாளையம் முத்துகுமார்(38) ஆகிய 4 பேரை கைது செய்தனர். ராசிபுரம் போக்குவரத்து காவலர் சதீஷ்குமார்(35) உள்பட 2 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் வழக்கறிஞர் விஸ்வராஜ் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று, ராசிபுரம் பார்கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் விஸ்வராஜ் தாக்கப்பட்டதை கண்டித்து, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Tags : court ,Rasipuram ,lawyer ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து