×

கொல்லிமலையில் சாராயம் காய்ச்சிய விவசாயி கைது

சேந்தமங்கலம், ஜூன் 7: கொல்லிமலையில் சாராயம் காய்ச்சிய விவசாயியை கைது செய்த போலீசார், 400 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். கொல்லிமலை அடுத்துள்ள திருப்பளிநாடு வால்குழிப்பட்டி ஆற்றங்கரை பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாக, வாழவந்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொன்.செல்வராஜ் தலைமையிலான போலீசார், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி செல்வம் (47) என்பவரை போலீசார் கைது செய்தனார்.  மேலும், சாராயம் காய்ச்ச போடப்பட்டு இருந்த 400 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்து அழிந்தனர்.

Tags :
× RELATED மது விற்ற 8 பேர் கைது