×

வையப்பமலை அருகே பைக்கில் இருந்து விழுந்தவர் லாரியில் சிக்கி பலி

திருச்செங்கோடு, ஜூன் 7: வையப்பமலை அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர், பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்செங்கோடு தாலுகா பெரியமணலியை சேர்ந்தவர்  குருசாமி(56). இவர் தனியார் குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று இவரும், புதுச்சத்திரத்தை சேர்ந்த ராஜா(25) என்பவரும் பைக்கில் வையப்பமலைக்கு சென்றனர். வையப்பமலை பிரிவு பாதை அருகே சென்றபோது, பின்னால் அமர்ந்திருந்த குருசாமி, திடீரென தவறி ரோட்டில் விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரம், குருசாமி மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த எலச்சிபாளையம் போலீசார், குருசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : victim ,Veypappalai ,
× RELATED கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி