×

முத்துப்பேட்டை அருகே தைலமர காட்டில் ஆண் சடலம் கொலையா? போலீஸ் விசாரணை

முத்துப்பேட்டை, ஜூன் 7:முத்துப்பேட்டை அருகே வனத்துறைக்கு சொந்தமான தைலமர தோப்பில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததை போலீசார் கைப்பற்றி அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தெற்குப்பள்ளியமேட்டில் வனத்துறையினருக்கு சொந்தமான ஆர்எஸ்பதி தோப்பில் கைலி, சட்டை அணிந்த நிலையில் சுமார் 55வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்ததை கண்டு அப்பகுதியில் சென்றவர்கள் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் சிலம்புசெல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிணம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இறந்து கிடந்தவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று தெரியவில்லை. இதுகுறித்து உதயமார்த்தாண்டபுரம் விஏஓ அர்ச்சுனன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : forest ,Thilamara ,investigation ,Muthupet Police ,
× RELATED காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட...