கிருஷ்ணகிரி, ஜூன் 7:கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ காமராஜ் தலைமையிலான போலீசார், செம்படமுத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தபோது, தென்பெண்ணை ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. உடனடியாக டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிராக்டரை ஓட்டி வந்த அதன் உரிமையாளரான செம்படமுத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் முருகேசனை(40) கைது செய்து சிறையில் அடைத்தனர்.