×

மழை பெய்து மேட்டூர் அணை நிரம்புவதற்காக கலச விளக்கு வேள்வி பூஜை

மேட்டூர், ஜூன் 7: பருவமழை நன்கு பெய்து மேட்டூர் அணை நிரம்ப வேண்டி, மேட்டூரில் ஆதிபராசக்தி மன்றத்தினர் கலச விளக்கு மற்றும் வேள்வி பூஜையை நடத்தினர். நடப்பாண்டில் பருவமழை நன்கு பெய்து, மேட்டூர் அணை விரைவில் முழுவதும் நிரம்பி, காவிரி பாசனம் செழிக்க வேண்டி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் சிறப்பு கலச விளக்கு வேள்வி பூஜை, மேட்டூர் அணையின் 16 கண் மதகு அருகே நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மேட்டூர் எம்எல்ஏ செம்மலை கலந்து கொண்டார்.

இந்த பூஜையில்  குரு கலசம், குரு யாக குண்டம், பஞ்சபூத சக்கரம் மற்றும் சதுர யாகக்குண்டம் ஆகிய வேள்விகளும், பஞ்சபூத வழிபாடு 1008 மற்றும் 108 போற்றி தமிழ் மந்திரங்களும் ஓதப்பட்டது. பின்னர் வேள்வி தீர்த்தம் மற்றும் சாம்பல் மேட்டூர் அணையில் விடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் சந்திரமோகன், தஞ்சை மாவட்ட தலைவர் வாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Mettur ,season ,dam ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு