×

காரிமங்கலத்தை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது; 30 பவுன் நகை, லாரி மீட்பு

காரிமங்கலம், ஜூன் 7: காரிமங்கலத்தை கலக்கிய பிரபல கொள்ளையனை கைது செய்த போலீசார், ₹10 லட்சம் மதிப்பிலான 30 பவுன் நகை மற்றும் லாரியை மீட்டனர். காரிமங்கலம் போலீசார் நேற்று மொரப்பூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டூவீலர் வந்த வாலிபர், போலீசாரை கண்டதும் வண்டியை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், நடத்திய விசாரணையில் அவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுந்தரவேல்(30) என்பது தெரிய வந்தது. தற்போது, காவேரிப்பட்டணத்தில் வசித்து வருவதும், காரிமங்கலம் அருகே சப்பாணிப்பட்டி, அடிலம் உள்ளிட்ட கிராமங்களில் கோயில்களுக்குள் புகுந்து கொள்ளையடித்ததும், கெரகோடஅள்ளி கிராமத்தில் வீடு புகுந்து நகைகளை அள்ளிச்சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், லாரி திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரவேலை கைது செய்தனர். அவரிடமிருந்து 30 பவுன் நகை மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ₹10 லட்சம் இருக்கும். பின்னர், பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : pirate ,artist ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...