×

ராஜபாளையம் அருகே குடியிருப்பில் ஆறாக ஓடிய கழிவுநீர்

ராஜபாளையம், ஜூன் 7: ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் நீர் நிரம்பி கழிவுநீர் குடியிருப்பில் புகுந்தது. ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தளவாய்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட 8 மற்றும் 9 வது வார்டு மாஞ்சோலை காலனியில் நேற்று மழை பெய்தது. அப்போது கால்வாய்களில் அடைப்பு இருந்ததால் மழைநீருடன் கழிவுநீர் நிரம்பி தெருக்களில் ஓடியது. இதனால் மக்கள் சிரமப்பட்டனர். தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே ஊராட்சி நிர்வாகம் வாய்க்காலை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : apartment ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!