×

மாவட்டம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் தீயில் கருகி மூதாட்டி சாவு

சிவகாசி, ஜூன் 7: சிவகாசியில் தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்தார். சிவகாசி தில்லை சிதம்பரம் நாடார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி காளீஸ்வரி(67). கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றி உள்ளது. கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்