×

கருகி வரும் பருத்தி செடிகள் கஞ்சா கடத்திய 5 பேர் கைது

கம்பம், ஜூன் 7: கம்பம் கோசந்திர ஓடை அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனை யிட்டனர். ஆட்டோவில் வந்த 5 வாலிபர்களிடம் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், கம்பம் சுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (29), முருகன் (27), தாத்தப்பன் குளம் பரமேஸ்வரன் (26), மின் வாரியம் அலுவல சாலையைச் சேர்ந்த அரவிந்த் (25) தேனி கோடாங்கி பட்டி அறிவழகன் (26) என்பதும் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது. கம்பம் வடக்கு  போலீசார் 5 பேரையும் கைது செய்தார்.

Tags : cotton plants ,
× RELATED வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில்...