×

மாவட்டம் அறுவடைக்கு தயார் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

திண்டுக்கல், ஜூன் 7: திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி விடுதிகள் மாணவர்களுக்கு 28ம், மாணவிகளுக்கு 14ம் உள்ளன. கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகள் மாணவர்களுக்கு 1ம், மாணவியருக்கு 6ம் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐடிஐயில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரலாம்.

பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் விகிதச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள். விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும் இல்லாமல், சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும்.  பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படும். மேலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டுதல் வழங்கப்படும். மலை பிரதேசங்களில் செயல்படும் விடுதிகளில் கம்பிளி, மேல் ஆடைகள் வழங்கப்படும்.

சேர தகுதி என்ன?
பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிமீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளியிடம் இருந்தோ, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம், மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 20.6.2019க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்லூரி விடுதிகளை  பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் 15.7.2019க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும் போது சாதி, ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இந்த சான்றிதழ் அளிக்க வேண்டும்.  தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அகதிகள் முகாம் குழந்தைகளுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகள் இந்த சலுகைகளை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார். Postal Regn No. MA /03/2018 - 2020

Tags : district ,school ,harvesting ,hostels ,
× RELATED இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு, பேரணி