×

மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசு பள்ளியில் சேர்ந்தவர்களுக்கு அமர்க்கள வரவேற்பு

வேடசந்தூர், ஜூன் 7: வேடசந்தூர் அருகே மல்வார்பட்டியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. 24 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு நடப்பு கல்வியாண்டில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி தனியார் பள்ளிகளில் செல்லவிருந்த மாணவர்கள் சிலரை சேர்த்தனர். புதிய மாணவர்களை ஊரில் உள்ள விநாயகர் கோயிலுக்கு மேளதாளத்துடன் அழைத்து சென்று சாமி கும்பிட்டு மாலை அணிவித்தனர். பின்னர் அவர்களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர்.  தலைமையாசிரியர் ஜோஸ்பின்ரீத்தா, ஆசிரியை ராதா ஆகியோர் மாணவர்கள், ஊர்மக்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

Tags : government school ,Vedassandur ,district ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை