×

ஆற்றில் மண்டி கிடக்கும் காட்டாமணக்கு செடிகள் வெண்ணாற்றில் மணல் கடத்திய 2 டிராக்டர் பறிமுதல்

பாபநாசம், ஜூன் 7: பாபநாசம் சுற்றுவட்டார பகுதியில் குடமுருட்டி, காவிரி, திருமலைராஜன் ஆறு, அரசலாறு, கொள்ளிடம், வெட்டாறு, வெண்ணாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் லாரி, மாட்டு வண்டி உள்ளிட்டவற்றில் மணல் கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பாபநாசம் குருபாலக்குடியில் வெண்ணாற்று பகுதியில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது வெண்ணாற்றில் அனுமதியின்றி 2 டிராக்டர்களில் மணல் அள்ளுவது தெரிந்தது. இதையடுத்து 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாபநாசம்: பாபநாசம் குருபாலக்குடியில் வெண்ணாற்று பகுதியில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வெண்ணாற்றில் அனுமதியின்றி டிராக்டர்களில் மணல் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : river ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...