×

கந்தர்வகோட்டையில் ஜமாபந்தி

கந்தர்வகோட்டை, ஜூன் 7: கந்தர்வகோட்டை தாலுகா பசலி 1428 வருவாய் தீர்வாயம் நேற்று நடைபெற்றது. புதுநகர் சரகத்தில் புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராதாஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் தாசில்தார் கலைமணி, துணை தாசில்தார் செல்வகணபதி, புதுநகர் வருவாய் ஆய்வாளர் அழகுசுப்பிரமணியராஜா, விஏஓ கருப்பையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தீர்வாயத்தில் பட்டா மாறுதலுக்கு 18மனுக்களும், வீட்டுமனை பட்டா கேட்டு 14 மனுக்களும், கஜா புயல் நிவாரணம் கோரி 2 மனுக்களும் மற்ற வகையில் 6 மனுக்களும் என வந்த 40 மனுக்களுக்கு உடனே தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...