×

சீர்காழி அருகே கீழச்சாலையில் குளத்தியம்மன் வீதி உலா

சீர்காழி, ஜூன் 7: சீர்காழி அருகே கீழச்சாலை குளத்தியம்மன் கோயிலில் வைகாசி மாத உற்சவத்தை முன்னிட்டு அம்மன் மாட்டு வண்டியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் மாவிளக்கிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். அம்மன் வீதி உலாவின் போது வாணவேடிக்கையும், பக்தர்கள் அம்மன் வேடமிட்டு நடனமாடிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Cuddathamman Street ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...