×

கிருஷ்ணராயபுரம் மகிளிப்பட்டியில் தடுப்பு சுவர் இல்லாத வாய்க்கால்பாலத்தால் விபத்து அபாயம்

கரூர், ஜூன் 7: வாய்க்கால் பாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மகிளிப்பட்டி பகுதியில் கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இங்குள்ள வாய்க்கால் பாலம் வழியாக லாலாப்பேட்டையில் இருந்து மகிளிப்பட்டி, புணவாசிப்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் பாலத்தில் தடுப்புசுவர் இல்லை. தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சேதம் அடைந்த பாலத்தை சீரமைப்பதற்கு பதிலாக புதிய பாலத்தை தடுப்பு சுவருடன் கட்ட ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Krishnarayapuram Mahilipatti ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு