×

குளித்தலை டிஎஸ்பி அலுவலகம் பின்புறம் வாய்க்கால் மேட்டுக்கு செல்லும்சாக்கடை அடைப்பால் பாதிப்பு

குளித்தலை, ஜூன் 7: குளித்தலை டிஎஸ்பி அலுவலகம் பின்புறம் உள்ள வாய்க்கால் மேட்டுக்கு செல்லும் கழிவுநீர் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி எல்லைக்குட்பட்ட 8, 9வது வார்டு பகுதியில் டிஎஸ்பி அலுவலகம், மகளிர் காவல் நிலையம், காவல் நிலையம், காவலர் குடியிருப்பு மற்றும் சபாபதி நாடார் தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சாக்கடை அனைத்தும் ஒன்று சேர்ந்து வாய்க்கால் மேட்டு பகுதிக்கு செல்கிறது. இந்நிலையில் அவ்வழியாக சமீப காலமாக கழிவுநீர் செல்ல முடியாமல் அடைபட்டதால் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் இப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் மழை பெய்யும் நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் புகுந்து விடுகிறது.இதனால் முதியவர்கள், குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் நிலை உருவாகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக டிஎஸ்பி அலுவலகம் பின்புறம் வாய்க்கால் மேட்டிற்கு செல்லும் வழியில் அடைப்பட்டு இருக்கும் கழிவுநீர் சாக்கடையில் தேங்கி இருக்கும் சிமென்ட் கட்டைகளை அகற்றி கழிவுநீர் சீராக செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : office ,DSB ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...