கரூர், ஜூன் 7: கரூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக, பிரியாணி கடை உரிமையாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(31). இவர் இந்த பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், விரக்தியடைந்த விஜயகுமார் கடந்த 3ம்தேதி இரவு வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இநத சம்பவம் குறித்து உறவினர் அளித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.